Thursday, August 15, 2013

ஒழுக்கம் என்றால் என்ன




















ஒழுக்கம் என்றால் என்ன என்பதற்கு ஒவ்வொருவரும் தமது அறிவுக்கெட்டிய வரையில் அவரவர் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். ஒருவர் திருவள்ளுவர் சொன்னதைச் சொல்வார். இன்னொருவர் கம்பராமாயணம், பாரதம் என்பவற்றில் அவரால் ஒழுக்கம் என்று புரிந்துகொள்ளப்பட்ட விடயத்தைக் கூறுவார். வேறு சிலர் யாரோ ஒருவருடைய சுய சரிதையை உதாரணம் காட்டி அதில் உள்ளது தான் ஒழுக்கம் என்பார். இன்னும் சிலர் மத நூல்களில் சொல்லப் பட்டவற்றை தான் ஒழுக்கம் என்பார்.

ஒழுக்க விதி என்று சொல்லப்படுகின்ற ஒன்று, ஒரு இனத்தையோ, மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது ஒரு மரபையோ ஏனையவற்றை விட உயர்ந்தது என்று பறை சாற்றுகிறதோ அதைக் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். வேண்டாம்! வேண்டாம்!! குழிதோண்டிப் புதைத்துவிட்டால் பிறிதொரு காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சிக்குள் அகப்பட்டு மீண்டும் மனிதர்களை மந்தைக் கூட்டங்களாக்கிவிடும். எனவே எரித்துவிடுங்கள். மதங்களும், மரபுகளும், கலாச்சாரங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவையே அன்றி மனிதனை மந்தைகளாக்குவதற்கு அல்ல. உண்மையில் ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுள்ள மனிதனாக இருந்தால் போதும். ஏனெனில் ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை. அதாவது உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாணி தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை.






உண்மையான  ஒழுக்கம்  என்பது நாம்  செய்யும்  செயல்  யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை மட்டுமே.

இதற்கு நமது மனசாட்சி மட்டுமே சாட்சி.

Monday, August 12, 2013

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள் !!!

எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காது. உதாரணமாக, ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண்களைப் பார்த்தால், பிடிக்காது. அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான்.அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். இப்போது எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

அசிங்கமாக பேசுபவர்கள்
பெண்களால் இந்த குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.

பல பெண்களுடன் அப்படி இருப்பவர்கள்
இந்த மாதிரியான குணமுள்ள ஆண்களுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.

ஆண்களுக்கு பெண்கள் நிகராக முடியாது
இத்தகைய குணமுள்ள ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.

குடிகாரர்கள்
பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.

தனிமையிலேயே இருப்பவர்கள்
தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது. ஆகவே சில இடங்களுக்கு செல்லும் போது நண்பர்களுடனும் செல்ல வேண்டும்.

சைக்கோ
சைக்கோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.

சுயநலவாதி
ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?

சந்தேகம்
உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

வேலையே முக்கியம்
வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேலைக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அதற்காக எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருந்தால், அத்தகைய ஆண்களையும் பெண்கள் வெறுப்பார்கள்.

ரொமான்ஸ் இல்லாதவர்கள்
பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

கவனக்குறைவு
ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். ஆண்களுள் சிலருக்கு நல்ல பொறுப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு

சோம்பேறித்தனம்
ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.

பெண்களிடம் ஆண்கள் விரும்பாத குணங்கள்

பெண்களிடம் ஆண்கள் விரும்பாத குணங்கள்

1. `நாம கொஞ்சம் பேசணும்’
உங்களவர், உலக சாம்பியன் வேகத்தில் ஓடி மறைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மேற்கண்ட மூன்று வார்த்தைகளைக் கூறினால் போதும். `ஏதோ பிரச்சினையைக் கிளப்பத் தான் அடி போடுகிறாள்’ என்று உணர்ந்துகொண்டு உடனடியாகத் தலைமறைவாகி விடு வார். `பேசுவது’ எல்லாம் கடைசியில் அழுகை, ஆத்திரம், தீர்வில்லாத நிலையில் தான் முடியும் என்று ஆண்களுக்குத் தெரியும். பெண்கள் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையை எப்படிக் கையாளுவது என்று ஆண்களுக்குத் தெரியாது. அப்போது கன்னாபின்னா வென்று நடக்கத் தொடங்கி விடுவார்கள். எதையும் மனந்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கட்டுரைகளில் சரியாகத் தெரியலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவாக ஒத்து வராது.

2. `நீங்க அம்மா பையன்’
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவு சீர் கெட விரும்பினால், அவரின் அம்மாவை அடிக்கடி பேச்சில் இழுத்தால் போதும். `பாருங்க… உங்க அம்மா இப்படிப் பண்றாங்க’, `உங்க அம்மா எப்போதும் அப்படித்தான்’ என்றெல்லாம் சொல்வதை எந்த ஆணும் விரும்புவ தில்லை. பெண்களுக்கு எப்படித் தங்கள் அம்மாவைப் பிடிக்குமோ, அப்படித்தான் ஆண் களுக்கும் தங்கள் அம்மாவைப் பிடிக்கும். அதனால் அம்மாவைக் குறை சொல்வதை அவர்கள் ரசிப்பதில்லை. அதேபோல, `நீங்க அம்மா பிள்ளை… உங்க அம்மா சொல்றது தான் உங்களுக்கு வேத வாக்கு’ என்று கூறுவதையும் விரும்புவதில்லை. பெண்கள் தங்களைத் தமது கணவர் அல்லது காதலரின் அம்மாவுடன் தராசுத் தட்டில் நிறுத்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான அணுகுமுறையில் நடந்துகொள்ள வேண்டும். அது, பெண்கள் தாங்கள் அம்மாவாகும்போது உதவும்.

3. `உங்க நண்பரைப் பாருங்க’
`உங்க நண்பரைப் பாருங்க… எவ்வளவு ஸ்டைலா இருக்காரு! நீங்களுந்தான் இருக்கீங்களே, தொந்தியும் தொப்பையுமா…’ என்று பேசும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணைவருடான உறவுக்குக்குத் தாங்களே வேட்டு வைப்பவர்கள். இப்படி பேசத் தொடங்குவது, `அப்படின்னா நீ `அவனை’யே காதலிச்சிருக்கலாம்’ அல்லது, `நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம்’ என்ற வெறுப்பான கத்தலில் தான் முடியும். பெண்கள் தங்கள் கணவரின் அல்லது துணைவரின் நண்பரிடம் வெளிப்படை யாகக் காணாத பல குறைபாடுகள் இருக்கக்கூடும். கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு, வியப்பது அறிவீனம். பெண்கள் எப்படித் தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லையோ, அதேபோலத்தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

4. `நீங்க எப்பவும் இப்படித்தான்… திருந்தவே மாட்டீங்க’
முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவதில்லை. அதிலும் அவர்களே தங்களிடம் இருந்து துறக்க விரும்பும் பழக்கங்களை, குறைபாடுகளை அடிக்கடி குத்திக்காட்டுவதை தாங்குவதே இல்லை. ஒருவரைப் பற்றி, `இவர் இப்படித்தான்’ என்று வெகு சீக்கிரமாக முடிவு கட்டிவிடுவது பெண்களின் குறைபாடு. எல்லாருமே தவறு செய்வது இயல்பு. சிலருக்கு இயல்பாகவே சில தவறுகள் சிலமுறை நேர்ந்துவிடும். அதுகுறித்து அந்த ஆணே வருத்தத்தில், குற்ற உணர்வில் இருப்பார். அப்போது, ஆறுதலாக இருப்பதுதான் பெண் துணையின் மீதான மதிப்பை ஆணுக்கு உயர்த்தும். மாறாக, நொந்த வேளையில் `லந்து’ செய்வது வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். `இப்பல்லாம்…’ என்ற வார்த்தையையும் தவிர்க்கலாம். `இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி அன்பாயில்ல…’ என்று மூக்கைச் சிந்துவதால் பயனில்லை.

5. `தலையெல்லாம் நரைச்சுப் போச்சு’
மத்திய வயதை நெருங்கும் ஆண்களுக்கு தலையில் நரைமுடிகள் தலைகாட்டத் தொடங்குமë. அவற்றை `இளநரை’ என்றெண்ணிச் சமாதானம் அடைவது ஆண்களின் வழக்கம். அதுகுறித்து அதிகம் சுட்டிக்காட்டுவதும், `உடனே சலூனுக்கு ஓடிப்போய் `டை’ அடிச்சுட்டு வாங்க’ என்று நெட்டித் தள்ளுவதும் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். `கல்யாணத்துக்கு முன்னால கொடியிடையா இருந்தே… இப்போ தடியிடையா ஆயிட்டே…’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமில்லையா?


இந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள்.
ஏன் அத்தகையவர் நண்பனாக இருக்கலாம் அல்லது பல வருடம் பழக்கமான நபராக கூட இருக்கலாம்.

ஆனால் அதற்காக எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ஆண்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. முக்கியமாக அவர்களின் கடந்த காலத்தை,பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கும் சில நினைவுகளை தங்களுக்குள் இருக்கவே விரும்புவார்கள். அதனை யாரிடமும் கூற விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவை அனைத்தையும் கூறினால், அவர்களது வாழ்க்கைக்கே உலை வைத்துக் கொள்வது போல் ஆகிவிடும். சரி, இப்போது ஆண்கள் அப்படி மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று சிலவற்றை பார்க்கலாமா?

பல ஆண்களுக்கு பெண்களின் கவர்ச்சி நடனங்களை, கிளப்களில் பார்ப்பது அலாதி விருப்பமாக இருக்கும். உங்களுக்கு கணவராக வரப் போகின்றவர், நண்பர்களுடன் சேர்ந்து பெண்களின் ஆடை அவிழ்ப்பு நடனத்தை கண்டு கழிக்க சென்றிருக்கலாம். ஆனால் அதனை பற்றிய சிறு துப்பை கூட அளிக்கமாட்டார். ஏனென்றால், எந்த ஒரு பெண்ணும் தன் கணவர் திருமணத்துக்கு முன் இந்த மாதிரி செயல்களில் ஈடுப்பட்டார் என்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இத்தகைய விஷயத்தை சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

தான் செய்த தவறு தன் மனைவிக்கு தெரிந்த பின் அவர்களின் கண்ணீர் பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கும். அதனால் ஆண்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். எனவே ஆண்கள் தங்களை ஒரு பலசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும் காட்டவே விரும்புகிறார்கள். மேலும் கண்ணீர் விடுவதும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதும், பெண்கள் செய்யக்கூடியவை என்றும் இன்னும் சில ஆண்கள் எண்ணுகிறார்கள்.

ஆபாசப் படங்களை ஏற்கனவே பார்த்ததாக யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக ஆண்களுக்கு ஆபாச விஷயங்களிலும், பாலின்பத்திலும் அதிக ஈடுபாடு இருந்த போதிலும், அதனை வெளிப்படையாக தங்கள் மனைவியிடம் கூற மறுப்பார்கள்.

பல ஆண்கள் தங்களின் தாயால் செல்லம் கொடுக்கப்பட்டு கெட்டு போய் உள்ளனர். அதனால் திருமணம் ஆன பின்பு அல்லது ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கும் போது, அந்த பெண்ணை தன் தாயுடன் ஒப்பிடுவதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். இது அவர்கள் இருவருக்குள்ளும் மன ஸ்தாபத்தை ஏற்படச் செய்யும். எனவே ஆண்களுக்கு தான் தாய்க்கு செல்லப் பிள்ளையாக இருப்பது தெரிந்திருந்தாலும், அது துணைக்கு தெரியக் கூடாது என்று நினைப்பர்.

தன் கனவுகளை மனைவியோடு பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் சில வகை கனவுகளும், கற்பனைகளும் கேட்பதற்கு, துணையை மட்டமாக எண்ணத் தூண்டலாம். அதனால் சில கனவுகளை ஆண்கள் சொல்லத் தயங்குவார்கள். ஏனெனில் அதனை கேட்டால் அவரை விட்டு போகக் கூட பெண்கள் தயங்க மாட்டீர்கள்.

 

எதையும் சுமப்பேன் அவருக்காக!

மதுரையை வணங்காமுடி பாண்டிய மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். மனைவி விஷயத்தில் அவன் கொடுத்து வைத்தவன். கணவனின் குறிப்பறிந்து மட்டுமல்ல, குறிப்பு அறியாமலும் சேவை செய்யும் குணமுள்ளவள். இப்படி ஒரு பத்தினி அமைந்தால் மன்னனுக்கென்ன கவலை. அவன் இன்ப வாழ்வு நடத்திக் கொண்டிருந்தான்.
ஒருநாள், பாண்டியநாட்டுக்கு பொய்யாமொழி புலவர் என்னும் தமிழ் வித்தகர் வந்தார். மீனாட்சியம்மன் கோயிலில் மன்னன் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார். அங்கே சொக்கநாதப் பெருமான் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான் மன்னன்.
இதைப்பார்த்த புலவர்,""மன்னா! நீ சந்திரகுலத்தைச் சேர்ந்தவன். அந்த சந்திரன் சிவபெருமானின் தலையில் போய் உட்கார்ந்திருப்பவன். அப்படிப்பட்ட சிறப்புமிக்க குலத்தைச் சேர்ந்த நீ, இந்த சொக்கநாதனின் கால்களில் போய் விழலாமோ?'' என்ற பொருள்பட ஒரு பாடலைப் பாடினார்.
மன்னன் தன் குலப்பெருமையை வெளிப்படுத்திய அந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தான். புலவரை வரவேற்று,""அவரது விருப்பம் என்ன?'' என்று கேட்டான்.
""மன்னா! மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்க வேண்டும், அதற்குரிய பணிக்காகவே இங்கு வந்துள்ளேன். உன் ஆதரவு வேண்டும்,'' என்றார் புலவர்.
""அப்படியே ஆகட்டும்,'' என்ற மன்னன், அவரை அழைத்துக்கொண்டு சங்கப்புலவர் சந்நிதிக்குச் சென்றான். அங்கே புலவர் பாடிய ஒரு பாட்டை சந்நிதியில் இருந்த 49 புலவர்களின் சிலைகளும் தலையசைத்து, கைதட்டி பாட்டைக் கேட்டன. மன்னன் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. உயிரோட்டமான பாடல் தந்த புலவருக்கு மதிப்பளிக்கும் வகையில், அவருக்கு தனி மாளிகை, சேவகர்கள் தந்து மன்னன் உபசரித்தான்.
ஆனால், அரசியல்பணி காரணமாக புலவரின் விருப்பமான தமிழ்ச்சங்க பணியை தாமதித்து விட்டான். கோபமடைந்த புலவர் பல்லக்கில் ஊரை விட்டே கிளம்பிவிட்டார். சேவகர்கள் ஓடிவந்தனர். மன்னன் உறங்கிக் கொண்டிருந்தான். மகாராணியிடம் முறையிட்டனர்.
அவள் பதறிவிட்டாள். புலவர் ஏதாவது பாடி சாபமிட்டால், மன்னனுக்கு ஏதும் செய்து விடக்கூடாதே என பயந்தாள். ஆண்போல வேடமணிந்து பல்லக்கை நோக்கி ஓடினாள். பல்லக்கு சுமந்த ஒருவனை விலகச்சொல்லி விட்டு, அவளே சுமந்தாள். பெண்ணல்லவா! அதிலும் பூஞ்சிட்டு கைகளைக் கொண்ட மகாராணியல்லவா! பலமற்ற அவள் பல்லக்கை சுமக்க சிரமப்பட்டாள்.
பல்லக்கு ஆடியது.
""பல்லக்கு ஏன் ஆடுகிறது?'' என புலவர் கூச்சலிட்டார். ""யாரோ ஒரு புதியவன் வந்து தூக்குகிறான். அதனால் தான்...'' என்றனர் சேவகர்கள்.
புலவர் கீழே இறங்கி வந்து பார்த்தார். அவருக்கு புரிந்து விட்டது. அங்கே நிற்பது ஒரு பெண், அதிலும் ராணி என்று.
அவர் அதிர்ந்து போனார்.
""ஏன் இப்படி செய்தாய் ராணி?'' என்றார்.
""என் கணவரைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. தாங்கள் கோபத்தால் வெளியூர் செல்ல வேண்டாம். மேலும், நீங்கள் ஏதேனும் சாபமிட்டு பாடினால், என் கணவருக்கு ஆகாது. தயவுசெய்து மீண்டும் அரண்மனைக்கு திரும்ப வேண்டும். சங்கப்பணிகள் குறித்து மன்னரிடம் நானே பேசி ஏற்பாடு செய்கிறேன்,'' என்றாள்.
புலவர் மனம் குளிர்ந்து, ""அம்மா! நீ உமாதேவியை விட குணத்தில் உயர்ந்தவள்,'' என்ற பொருள்படும்படி பாடி அவளை வாழ்த்தினார். மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.
பாண்டியனும் அவரிடம் மன்னிப்பு கேட்டு சங்கப்பணிகளைத் துவங்குவதற்குரிய ஏற்பாடுகளை வேகமாகச் செய்தான். கணவனின் நல்வாழ்வுக்கு மனைவி உறுதுணையாக இருக்க வேண்டும். அவனுக்கு எதிர்பாராமல் கஷ்டம் வந்தால், அதனைத் தீர்க்க எவ்வளவு பெரிய சுமையையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த சம்பவம்.

Wednesday, July 10, 2013

எங்கு சுதந்திரம் அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் மனது அதிக ஈடுபாட்டை காட்டும்

உயிர்களில் சின்ன உயிர் பெரிய உயிர் என்று கிடையாது அனைத்தும் உயிர் தான். மரங்களும் உயிர்கள் தான். நாம் வாழ்க்கை தினமும் நடத்துவது என்றால் கண்டிப்பாக ஏதாவது ஒரு உயிரை கொன்று தான் நடத்த வேண்டியுள்ளது. அசைவம் சாப்பிடுவதும் சைவம் சாப்பிடுவதும் அவர் அவர்களின் விருப்பம் அதில் தலையிட வேண்டியதில்லை. 

நீங்கள் நினைப்பது என்ன என்றால் ஆன்மீகம் என்பது வெளிவேஷம் போட்டுக்கொண்டு இருப்பது என்று நினைக்கிறீர்கள் அது  தவறான ஒன்று. ஆன்மீகம் மனதில் இருக்கவேண்டும் அப்பொழுது மட்டும் அது சிறந்த நிலைக்கு வரமுடியும். வெளியில் காட்டிக்கொள்பவர்கள் சொல்லுவார்கள் அசைவம் சாப்பிடகூடாது. அதன் மூலம் பாவம் நமக்கு வரும். அப்படி இரு இப்படி இரு என்று சொல்லுவார்கள். இவர்கள் இப்படி சொல்லிவிட்டு மனதால் பல பேரை கொன்றுக்கொண்டு இருப்பார்கள். ஒருவரை நேரில் கொல்லுவதை விட மனதால் கொல்லுவது மிகப்பெரிய பாவம்.

கண்டிஷன் போட்டுக்கொண்டு ஆன்மீகத்தை கற்பித்துகொடுத்தால் அதன் மேல் வெறுப்பு தான் வரும் அதைபோல் மதங்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் குடும்பத்தை நடத்துபவர்களுக்கு தான். 

பிரம்மசரியம் என்பது அது ஒரு ஆன்மீகவழி தான். அது மட்டும் தான் வழி என்று நினைத்தால் தவறு. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிறைய ஆன்மீகவழிகளை சொல்லியுள்ளார்கள் அதனை எடுத்துக்கொண்டு அதன்படி நடக்கலாம்.

எங்கு சுதந்திரம் அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் மனது அதிக ஈடுபாட்டை காட்டும். நமது மதத்தில் அதிக சுதந்திரம் இருக்கிறது இடையில் வந்தவர்கள் அதிககட்டுபாட்டை விதிக்கிறார்கள் அது தவறு. 

எப்படி வேண்டுமானாலும் இருந்துக்கொண்டு ஆன்மீகத்தில் ஈடுபடும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகம் உங்களை மாற்றும். இதனை நீங்கள் அனுபவத்தில் உணரலாம்.