Thursday, August 15, 2013

ஒழுக்கம் என்றால் என்ன




















ஒழுக்கம் என்றால் என்ன என்பதற்கு ஒவ்வொருவரும் தமது அறிவுக்கெட்டிய வரையில் அவரவர் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். ஒருவர் திருவள்ளுவர் சொன்னதைச் சொல்வார். இன்னொருவர் கம்பராமாயணம், பாரதம் என்பவற்றில் அவரால் ஒழுக்கம் என்று புரிந்துகொள்ளப்பட்ட விடயத்தைக் கூறுவார். வேறு சிலர் யாரோ ஒருவருடைய சுய சரிதையை உதாரணம் காட்டி அதில் உள்ளது தான் ஒழுக்கம் என்பார். இன்னும் சிலர் மத நூல்களில் சொல்லப் பட்டவற்றை தான் ஒழுக்கம் என்பார்.

ஒழுக்க விதி என்று சொல்லப்படுகின்ற ஒன்று, ஒரு இனத்தையோ, மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது ஒரு மரபையோ ஏனையவற்றை விட உயர்ந்தது என்று பறை சாற்றுகிறதோ அதைக் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். வேண்டாம்! வேண்டாம்!! குழிதோண்டிப் புதைத்துவிட்டால் பிறிதொரு காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சிக்குள் அகப்பட்டு மீண்டும் மனிதர்களை மந்தைக் கூட்டங்களாக்கிவிடும். எனவே எரித்துவிடுங்கள். மதங்களும், மரபுகளும், கலாச்சாரங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவையே அன்றி மனிதனை மந்தைகளாக்குவதற்கு அல்ல. உண்மையில் ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுள்ள மனிதனாக இருந்தால் போதும். ஏனெனில் ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை. அதாவது உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாணி தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை.






உண்மையான  ஒழுக்கம்  என்பது நாம்  செய்யும்  செயல்  யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை மட்டுமே.

இதற்கு நமது மனசாட்சி மட்டுமே சாட்சி.

4 comments:

Unknown said...

vaazhka valamudan. nalla vilakkam
நல்ல விளக்கம் .ஒழுக்கம் என்றால் என்ன என்பதை விளங்கிக்கொண்டேன்

Unknown said...

ozhukkam endra sollukku nalla vilakkam tharappaddathu

நெய்தல் உலகம் said...

நன்றி அண்ணா. நான் எதிர் பார்த்த பதிலை சொல்லிட்டீங்க

Sudhanmarimuthu said...

Ozhukkam Madham , Inam , Kalacharam , ivatraium thandi oru manithanin unarvukalukull irukum andha punitha aanmavin seyalpade agum ... nalla villakam ,,, NANDRI AYYA.....